அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 50வது பிறந்தநாள் விழா சிதம்பரத்தில் மாவட்ட வர்த்தக காங்கிரஸ் சார்பில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி ஆணைக்கிணங்க விவசாயிகள் தினமாகக் கொண்டாடப்பட்டு விவசாயிகளுக்கு விதை நெல்லும் மரக்கன்றுகளும் மற்றும் 300 பேருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. கீழரதவீதியில் உள்ள காமராஜர் சிலை அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.பி.கே.சித்தார்த்தன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கே.ஐ..மணிரத்தினம், மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர நிர்வாகி டி.லட்சுமணன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் விசுவநாதன், சத்தியமூர்த்தி, நூர்அலி, ஜெயச்சந்திரன், மாநில துணைத்தலைவர் செந்தில்குமார், ஓபிசி மாநிலச் செயலாளர் குணக்குன்று, ஊடகப்பிரிவு மாநில பொதுச் செயலாளர் சிவசத்தியராஜா, மாவட்ட துணைத்தலைவர்கள் நசீர் அகமது, கட்டாரி சந்திரசேகர், ஜெயம் ரவி, மாவட்ட விவசாய தலைவர் வினோபா, ஓபிசி மாவட்ட தலைவர் குமரவேல், சிறுபான்மை மாவட்ட தலைவர் ஷாஜகான், பரங்கிப்பேட்டை வட்டார தலைவர் சுந்தர்ராஜன், குமராட்சி வட்டார தலைவர் சுந்தரமூர்த்தி, நகர நிர்வாகிகள் ஒபிசி நகர தலைவர் நெல்சன், நாராயணசாமி, லாரன்ஸ், பொன்.நாகராஜ், இந்திரா, அமுதவல்லி, மாலதி, வைதேகி, கண்ணகி, கிருஷ்ணமூர்த்தி, ஜானகிராமன், முத்து கணேசன், சிவகுமார், செந்தமிழ்செல்வன், லீலாதேவி, இளைஞர் காங்கிரஸ் ஆனந்த் மற்றும் பலர் கலந்துகொண்டனர். மாவட்ட துணைத்தலைவர் சி.பி. ரத்தினம் அவர்கள் நன்றி கூறினார்.