சென்னை: எல்லைப் பதற்றத்தை தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள்? என்று மத்திய அரசுக்கு மநீம தலைவர் கமல் கேள்வி ‘எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக ஞாயிறன்று அவர் அளித்துள்ள பேட்டியில்,’‘எல்லை பதற்றத்தை தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள்? லடாக் விவகாரத்தில் தேசத்தின் பாதுகாப்பை பாதிக்காத வகையில் உண்மை நிகழ்வுகளை மக்களிடம் பகிருங்கள். கேள்வி கேட்பவர்களை தேசத்திற்கே விரோதியைப் போல ஒரு பிம்பத்தை கட்டமைத்திருக்கிறீர்கள்!’ என்று தெரிவித்துள்ளார்.