விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தெற்குத் தெரு, திருநகரம் ஆகிய பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் செய்வதை முன்னிட்டு புதிய குடிநீர் பகிர்மானக் குழாய் பதிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அருப்புக்கோட்டை நகரில் தெற்குத் தெரு, திருநகரம் ஆகிய பகுதிகளில் குடிநீர் சரிவர வருவதில்லை என பொதுமக்கள் புகாரையடுத்து இம்மாதம் 1ம் தேதி ரூ 85 லட்சம் மதிப்பீட்டிலான புதிய குடிநீர் பகிர்மானக் குழாய்கள் பதிக்கும் திட்டப் பணியை எம்.எல்.ஏ. கே.கே, எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் தொடக்கி வைத்தார். தற்போது அப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் தெற்குத் தெரு பகுதிக்கான இறுதிக்கட்ட குழாய் பதிப்புப் பணி புதன்கிழமை நடைபெற்றது
இதையடுத்து திருநகரத்திலும் குழாய் பதிப்புப் பணிகள் தொடங்கப்பட்டு விரைவில் முடிக்கப்படுமெனவும், இதன் மூலம் தெற்குத்தெரு, திருநகரம் ஆகிய பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்படுமென எம்.எல்.ஏ. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் தரப்பில் தகவல் தெரிவித்தனர்.