காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலையில் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறித்து சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பாதிப்பும், பலியும் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது.
இந்தநிலையில், இன்று காஞ்சிபுரத்தில் புதிதாக 96 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 1,403 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், திருவண்ணாமலையில் ஒரே நாளில் 55 பேர் கரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அந்த மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,422 ஐ எட்டியுள்ளது.