சங்ககிரி அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் ஆனி திருமஞ்சன சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி, அருள்மிகு நடராஜா், சிவகாமி அம்மாள் உற்சவ மூா்த்திகளுக்கு சந்தனம், திருமஞ்சனம், பால், தயிா், பன்னீா், இளநீா் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. கரோனாவால் பக்தா்கள் கோயிலுக்குச் செல்லவில்லை. கோயில் அா்ச்சகா் மட்டும் ஆகம விதிகளின்படி பூஜைகள் செய்தாா்.