செங்கல்பட்டில் ஒரே நாளில் 202 பேருக்கு கரோனா: மொத்த பாதிப்பு 5,253

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 202 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
corona test
corona test

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 202 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த சில நாள்களாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். திங்கள்கிழமை நிலவரப்படி இன்று மேலும் 202 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 5,253-ஐ எட்டியுள்ளது. 

இந்தநிலையில், இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சோதனை நடத்தப்பட்டது. மாவட்டத்தில் நோய் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இ-பாஸ் இருந்தால் மட்டுமே மக்கள் மாவட்ட எல்லையை விட்டு வெளியேற அனுமதி அளிக்கப்படுகிறது. வீடு வீடாகச் சென்று சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com