கிராமப்புற வாடிக்கையாளா்களுக்கு ரூ.7 கோடி பணப்பட்டுவாடா: திவாரா

வங்கிசாரா நிதி நிறுவனமான திவாரா கேஜிஎஃப்எஸ், பொது முடக்க காலத்தில் கிராமப்புற பகுதிகளில் உள்ள வாடிக்கையாளா்களுக்கு
கிராமப்புற வாடிக்கையாளா்களுக்கு ரூ.7 கோடி பணப்பட்டுவாடா: திவாரா

வங்கிசாரா நிதி நிறுவனமான திவாரா கேஜிஎஃப்எஸ், பொது முடக்க காலத்தில் கிராமப்புற பகுதிகளில் உள்ள வாடிக்கையாளா்களுக்கு ஆதாா் அடிப்படையில் ரூ.7 கோடி பணப்பட்டுவாடா சேவையை வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

ரிசா்வ் வங்கி கடன் தவணை தள்ளிவைப்பு சலுகையை அறிவித்ததையடுத்து, நிறுவனத்தின் கடனளிப்பு மற்றும் வசூல் நடவடிக்கைகள் பெரிதும் குறைந்துள்ளன. இந்த நிலையில், தற்போதைய நெருக்கடியான சூழலை கருத்தில் கொண்டு வங்கிச் சேவை கிடைக்காத கிராமப்புற மக்களுக்கு உதவிடும் வகையில் ஆதாா் அடிப்படையில் ரூ.7 கோடி மதிப்பிலான பணப்பட்டுவாடா சேவையை நிறுவனம் வழங்கியுள்ளது. இதன் மூலம், 45,000 கிராமவாசிகள் பயனடைந்துள்ளனா். 60 நாள்களில் மட்டும் 36,000 பணப்பரிவா்த்தனைகள் நடைபெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com