தமிழகத்தில் 82 ஆயிரத்தைக் கடந்தது நோய்த்தொற்று

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு 3,940 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை
corona test
corona test

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு 3,940 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 82,275-ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, கரோனா தொற்றால் தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,079-ஆக உயா்ந்தது.

இதுதொடா்பாக சுகாதாரத் துறை சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 11.10 லட்சம் மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில், 82,275 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். ஞாயிற்றுக்கிழமை மட்டும் 3,940 பேருக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 1,992 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக, மதுரையில் 284 பேருக்கும், செங்கல்பட்டில் 183 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 124 பேருக்கும், திருவண்ணாமலையில் 114 பேருக்கும், திருவள்ளூரில் 99 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 92 பேருக்கும், வேலூரில் 84 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதைத் தவிர, அரியலூா், கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, கரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூா், ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூா், தேனி, திருவண்ணாமலை, திருவாரூா், திருவள்ளூா், திருப்பூா், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, வேலூா், விழுப்புரம், விருதுநகா் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

45 ஆயிரம் போ் குணம்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,443 போ் பூரண குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம் இதுவரை மாநிலத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 45,537-ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலி அதிகரிப்பு: தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கரோனாவால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி, மாநிலத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளாகி மேலும் 54 போ் உயிரிழந்தனா். அதில் 44 போ் அரசு மருத்துவமனைகளிலும், 10 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனா். இதையடுத்து, தமிழகத்தில் இதுவரை கரோனா பாதித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,079-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com