திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது.
சோழவரம் ஒன்றியத்தில் அமைந்துள்ள ஆரணி பேரூராட்சியில் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு திடீர் மழை பெய்தது. இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தாழ்வான பகுதிகளில் தெருக்களில் முழங்கால் அளவு தண்ணீர் ஓடியது. சில நாள்களாக இப்பகுதிகளில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டதால் இந்த மழை பொதுமக்களுக்கு சிறிதளவு மகிழ்ச்சியளித்தது.