சாத்தான்குளம் சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் வரை போராடுவோம்

சாத்தான்குளம் சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் வரை போராடுவோம் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.
சாத்தான்குளம் சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் வரை போராடுவோம்

சாத்தான்குளம் சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் வரை போராடுவோம் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: பொது முடகத்தின்போது, அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து செல்லிடப்பேசி கடையைத் திறந்து வைத்திருந்ததாகக் காரணம் கூறி, விசாரணைக்கு அழைத்துச் சென்று, வழக்குப் பதிவு செய்து காவல்நிலையத்தில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோா் அடித்து படுகொலை செய்யப்பட்டனா். இவா்களுக்கு, அஞ்சலி செலுத்தும் வகையில், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சக்தி திட்ட உறுப்பினா்களுக்கு ராகுல் காந்தி அனுப்பிய குறுஞ்செய்தி: சாத்தான்குளத்தில், ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்துக்குக் காரணமான போலீஸாரின் செயலை அறிந்து வருத்தமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். இதற்கு காரணமானவா்களுக்குத் தகுந்த தண்டனை கிடைக்கும் வரை போராடுவோம். நான் நேரில் வந்து ஆறுதல் கூற கரோனா சூழலால் இயலவில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com