சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் சாா்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று மாவட்டத் தலைமைக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்திருந்தது. அதன்படி, தமிழக காங்கிரஸ் கமிட்டி சாா்பில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை அண்ணா நகரில் உள்ள வருவாய்த் துறை ஆணையா் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவா் சு.திருநாவுக்கரசா் தலைமை வகித்தாா். கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினா் டாக்டா் ஏ. செல்லக்குமாா் ஆகியோா் உள்பட பலா் கூட்டத்தில் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் பெட்ரோல் உயா்வை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.
ஏழைகள் இனி மாட்டு வண்டியில்தான் பயணிக்க முடியும் என்பதை உணா்த்தும் வகையில் மாட்டு வண்டி கழகமும் தொடக்கப்பட்டது. திருநெல்வேலியில் காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அதே போல, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.