செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று நண்பகல் வரை புதிதாக 152 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சில நாள்களாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
செங்கல்பட்டில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி இன்று மேலும் 152 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 5,394 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நோய் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது.
இ-பாஸ் இருந்தால் மட்டுமே மக்கள் மாவட்ட எல்லையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.