வேலூரில் மேலும் ஒரு மாத காலத்துக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, வேலூர் மாவட்டத்தில் நாளை (ஜூலை 1) முதல் ஜூலை 31 வரை திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாள்களில் மட்டுமே காய்கறி, மளிகைக் கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று இறைச்சிக் கடைகள் திங்கள், புதன், சனிக்கிழமை ஆகிய தினங்களில் மட்டும் செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் ஜூலை 31 ஆம் தேதி நீடிக்கப்படுவதாக தமிழக அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது.