பெண்களை ஏமாற்றிய விவகாரம்: காசியின் தந்தை கைது 

பெண்களை ஏமாற்றிய விவகாரம்: காசியின் தந்தை கைது 

பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள காசியின் தந்தை தங்கபாண்டியனை சிபிசிஐடி காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். 

நாகர்கோவில்: குமரியில் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள காசியின் தந்தை தங்கபாண்டியனை சிபிசிஐடி காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். 

நாகர்கோவில் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காசி (26). இவர் சமூக வலைதளங்கள் மூலம் இளம் பெண்களை தொடர்பு கொண்டு காதலிப்பது போல் நடித்து ஏமாற்றி அவர்களோடு தனியாக இருக்கும் படங்கள் மற்றும் விடியோக்கள் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக கைது செய்யப்பட்டார். 

இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த ஒரு பெண் மருத்துவர் அளித்த புகாரின் பேரில் காசி கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் மீது 4 பெண்களும் ஒரு இளைஞரும் அளித்த புகாரின் பேரில் ஒரு போக்சோ வழக்கு 2 பாலியல் வழக்குகள் ஒரு கந்து வட்டி வழக்கு என 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

இதற்கிடையே  காசியின் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. காசியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட செல்லிடப்பேசி, மடிக்கணினி, மெமரி கார்டு ஆகியவற்றை ஆய்வு செய்த சைபர் கிரைம் போலீசார் அதில் இருந்து ஏராளமான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் இந்த ஆதாரங்களை காசியின் தந்தை தங்கபாண்டியன் அழித்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. தனது மகனை காப்பாற்றும் நோக்கத்தில் அவர் ஆதாரங்களை அழித்ததும் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து தங்கபாண்டியனை சிபிசிஐடி காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com