தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களில் பின்பற்றப்பட வேண்டி வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுபற்றி தமிழக அரசின் வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
சென்னை பெருநகர காவல் துறை எல்லைக்குள்பட்ட பகுதிகள் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்து தமிழகத்தின் கிராமப்புற பகுதிகளில் ஆண்டு வருமானம் ரூ. 10,000-க்கும் குறைவாக செயல்பட்டு வரும் சிறிய கோயில்கள், மசூதிகள், தர்காக்கள், தேவாலயங்கள் மற்றும் மற்ற வழிபாட்டுத் தலங்களில் ஜூலை 1 முதல் பொது மக்கள் வழிபாட்டுக்கு அனுமதியளிக்கப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லியில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகள், சோழவரம் பிளாக், செங்கல்பட்டு மாவட்டத்தில் காட்டாங்குளத்தூர் பிளாக்கில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகள் மற்றும் மதுரை மாவட்டத்தில் மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் பிளாக்குகளில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் ஜூலை 6-ஆம் தேதி முதல் பொது மக்கள் வழிபாட்டுக்கு அனுமதியளிக்கப்படுகிறது.