அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டீசல் விலை உயர்வு, கரோனா பரவல் உள்ளிட்ட பிரச்னைகளுக்காகவும், இறால்களை மீன் ஏற்றுமதியாளர்கள் குறைந்த விலைக்கு வாங்குவது, வெளி மாவட்ட வியாபாரிகள் வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் மீன்பிடித் தொழிலில் நஷ்டம் ஏற்படுவதால், திங்கள்கிழமை முதல் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்வதில்லை என முடிவு செய்து மீன்பிடிக்கச் செல்லவில்லை. சுமார் 300 மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
ஆனால், மற்றொரு மீன்பிடித்தளமான கோட்டைப்பட்டினம் மீனவர்கள் சுமார் 240 பேர் கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றுள்ளனர்.