சென்னை விமான நிலையத்தில் 1.5 கிலோ தங்கம், அமெரிக்க டாலர்கள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் 1.5 கிலோ தங்கம் மற்றும் அமெரிக்க டாலர்கள் கடத்திய விவகாரத்தில் இருவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் 1.5 கிலோ தங்கம், அமெரிக்க டாலர்கள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் 1.5 கிலோ தங்கம் மற்றும் அமெரிக்க டாலர்கள் கடத்திய விவகாரத்தில் இருவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரகசிய தகவல்களின் அடிப்படையிலும், சந்தேகத்தின் அடிப்படையிலும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அவ்வகையில், திங்கள்கிழமை நடைபெற்ற சோதனையில் பயணி ஒருவரிடம் இருந்து ரூ. 64.56 லட்சம் மதிப்புடைய 1.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 

மற்றொருவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 5.18 லட்சம் மதிப்புடைய 7,300 அமெரிக்க டாலர்களைப் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இவர்கள் இருவரும் சுங்கத்துறை சட்டம் 1962-ன் கீழ் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சோதனைகளில் ரூ.85 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டதாக சென்னை விமான நிலைய சுங்கத் துறை ஆணையரகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com