திருமங்கலம் அருகே வங்கிகளில் கடன் பெற்றுத் தரும் பணி செய்து வந்த இளைஞர் மர்மமான முறையில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் காந்திநகர் புதர் பகுதியில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்தார். இதையடுத்து அப்பகுதியினர் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, இறந்தவர் விருதுநகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (31) என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இவர், வீடுகட்ட வங்கிகளில் கடன் பெற்று தரும் பணி செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், மணிகண்டன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.