திருப்பூரில் செயல்பட்டு வரும் நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமடைந்தன.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பூமலூரில் செந்தில் வடிவேலன் என்பவரது கட்டடத்தில் சிவபிரகாஷ் என்பவர் நடத்தி வரும் நூற்பாலையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு விரைந்த திருப்பூர், பல்லடம், அவினாசி தீயணைப்பு நிலைய வீரர்கள், மூன்று தீயணைப்பு வாகனங்களுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தீயணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள், பஞ்சு மற்றும் நூல்கள் எரிந்து நாசமைடந்தது.