மேட்டூர் அணை உபரி நீரை ஏரி, குளங்களில் நிரப்பும் சரபங்கா திட்டம் 11 மாதங்களில் நிறைவு: முதல்வர்

11 மாதங்களில் சரபங்கா திட்டம் நிறைவேற்றப்பட்டு, ஏரி குளங்களுக்கு நீர் நிரப்ப‌ப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணை உபரி நீரை ஏரி, குளங்களில் நிரப்பும் சரபங்கா திட்டம் 11 மாதங்களில் நிறைவு: முதல்வர்

11 மாதங்களில் சரபங்கா திட்டம் நிறைவேற்றப்பட்டு, ஏரி குளங்களுக்கு நீர் நிரப்ப‌ப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரைக் கொண்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்களை நிரப்பும் சரபங்கா திட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.  நிழ்ச்சியில் பேசிய முதல்வர், தமிழகம் முழுவதும் குடிமராமத்து திட்டம் வேகமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. குடிமராமத்து திட்டம் குறித்து ஸ்டாலின் அவதூறு பரப்புகிறார். 

குடிமராமத்து திட்டம் முழுக்க முழுக்க விவசாயிகள் பங்களிப்புடன் நிறைவேற்றப்பட்டது. 11 மாதங்களில் சரபங்கா திட்டம் நிறைவேற்றப்பட்டு, ஏரி குளங்களுக்கு நீர் நிரப்ப‌ப்படும். மேட்டூர் அணை நிரம்பிய பிறகு கிடைக்கும் உபரி நீர் இனி மக்களுக்கு நேரடியாக பயன்படும். மாநிலம் முழுவதும் தடுப்பணைகள் கட்ட ரூ.1000 கோடி ஒதுக்கி பணிகள் நடைபெறுகின்றன. 

காவிரி - கோதாவரி திட்டம் நிவேற்றப்பட்டால் தமிழகத்துக்கு 200 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்; ஆந்திரா, தெலங்கானா முதலமைச்சர்களுடன் இணைந்து இத்திட்டம் நிறைவேற்றப்படும். எந்த நிகழ்ச்சியிலும் கிடைக்காத மகிழ்ச்சி தற்போது கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். சரபங்கா திட்டம் ரூ. 565 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com