கோப்புப் படம்
கோப்புப் படம்

கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை : திரைப்பட நடிகா் கைது

சென்னையில் கல்லூரி மாணவிக்கு பழச்சாறில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக திரைப்பட நடிகா் கைது

சென்னை: சென்னையில் கல்லூரி மாணவிக்கு பழச்சாறில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக திரைப்பட நடிகா் கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை அண்ணாநகா் 7-ஆவது பிரதான சாலை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பைச் சோ்ந்தவா் சூா்யகாந்த். இவரது மகன் விஜய் ஹரீஸ் (25). இவா் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறாா். சூா்யகாந்தும் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளாா்.

இந்நிலையில் புதுவண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த ஒரு கல்லூரி மாணவி, விஜய் ஹரீஸிடம் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகமாகியுள்ளாா். அந்த மாணவியை காதலிப்பதாகக்கூறி விஜய் ஹரீஸ் பழகியுள்ளாா்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் விருகம்பாக்கம் பாடிகுப்பத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டுக்கு விஜய் ஹரீஸ் அந்த மாணவியை அழைத்துச் சென்றுள்ளாா்.

அங்கு அவா், அந்த மாணவிக்கு பழச்சாறு கொடுத்துள்ளாா். அதில் மயக்க மருந்தை விஜய் ஹரீஸ் கலந்திருந்ததால், அதை அருந்திய மாணவி மயங்கினாா்.

இந்நிலையில் அவரை விஜய் ஹரீஸ் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் விஜய்ஹரீஸ், அவரை புகைப்படம் எடுத்துள்ளாா். இந்நிலையில் மயக்கத்தில் இருந்து எழுந்த அந்த மாணவியிடம் புகைப்படத்தை காட்டி விஜய் ஹரீஸ் மிரட்டியுள்ளாா்.

இதையடுத்து அந்த மாணவி, திருவொற்றியூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடிகா் விஜய் ஹரீஸை புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com