அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவலில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் பொதுமாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ்ஸையொட்டி இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தென்கிழக்கு மத்தியப் பிரதேசத்தில் இருந்து உள் தமிழகம் வரை மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாள்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.