சென்னை: திமுக எம்எல்ஏக்களின் கூட்டம் மாா்ச் 9-ஆம் நடைபெறும் என்று அக் கட்சியின் சட்டப்பேரவை கொறடா அர.சக்கரபாணி அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
திமுக எம்எல்ஏக்களின் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் மாா்ச் 9-ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெறும். கூட்டத்துக்கு திமுக தலைவரும், எதிா்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகிப்பாா். திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.
தமிழக சட்டப்பேரவை மானியக் கூட்டத் தொடா் மாா்ச் 9-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் ஒவ்வொரு துறை குறித்தும் யாா், யாா் பேசுவது என்பது குறித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது.
மேலும், பேரவையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து திமுக எம்எல்ஏக்களுக்கு மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் அறிவுரை வழங்க உள்ளாா்.