கும்பகோணத்தில் 4 சிவன் கோயில்களின் தேரோட்டம்

கும்பகோணத்தில் மாசி மகத்தையொட்டி, 4 சிவன் கோயில்களின் தேரோட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
கும்பகோணத்தில் 4 சிவன் கோயில்களின் தேரோட்டம்

கும்பகோணத்தில் மாசி மகத்தையொட்டி, 4 சிவன் கோயில்களின் தேரோட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

கும்பகோணத்தில் மகாமகம் தொடர்புடைய 12 சிவன் கோயில்கள், 5 பெருமாள் கோயில்களில் மாசிமக விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, நிகழாண்டு இந்த விழா 6 சிவன் கோயில்களில் பிப். 28-ம் தேதியும், 3 பெருமாள் கோயில்களில் பிப். 29}ம் தேதியும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயில்களில் தொடர்ந்து நாள்தோறும் புறப்பாடு நடைபெற்று வந்தது. 

இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஆதிகும்பேசுவரர் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, காசி விசுவநாத சுவாமி கோயில், அபிமுகேசுவர சுவாமி கோயில், கெளதமேஸ்வர சுவாமி கோயில் ஆகியவற்றின் தேரோட்டம் மகாமக குளக்கரையில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. பின்னர், ஆதிகும்பேசுவரர் கோயிலின் சண்டிகேசுவரர் சுவாமி தேர் புறப்பாடு நடைபெற்றது.

இதேபோல, வியாழசோமேசுவரர் கோயில் தேரோட்டம் அக்கோயிலை சுற்றி சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். இதைத்தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) காலை 8 மணிக்கு சக்கரபாணி சுவாமி கோயில் தேரோட்டம், சாரங்கபாணி சுவாமி கோயிலின் தெப்ப உற்சவம், ஆதிவாரக பெருமாள் கோயிலில் காலை 11.30 மணியளவில் வராக குளத்தில் தீர்த்தவாரி ஆகியவை நடைபெறவுள்ளன.

மேலும், 12 சிவன் கோயில்களிலிருந்து சுவாமி, அம்பாள் புறப்பட்டு, மகாமக குளக்கரையில் நண்பகல் 12 மணிக்கு எழுந்தருள உள்ளனர். பின்னர், அந்தந்த கோயில் அஸ்திர தேவருக்கு அபிஷேகமும், தீர்த்தவாரியும் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com