ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆட்டோ ஓட்டுநர் குத்திக்கொலை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செவ்வாய்கிழமை இரவு ஆட்டோ ஓட்டுனர் குத்திக்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆட்டோ ஓட்டுநர் குத்திக்கொலை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செவ்வாய்கிழமை இரவு ஆட்டோ ஓட்டுனர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது கரைவளைந்தான்பட்டி இந்த கிராமத்தில் வசித்து வந்த கருப்பையா மகன் கிருஷ்ணமூர்த்தி (19) ஆட்டோ ஓட்டுனர். இவர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக பேருந்து நிறுத்தம் அருகே ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்தார். 

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு கரைவளைந்தான்பட்டி கிராமத்திற்கு  செல்ல மீனாட்சிபுரம் செல்லும் பாதையில்  உள்ள தனியாருக்குச் சொந்தமான ரைஸ்மில், அருகே தனது  ஆட்டோவில்  சென்று கொண்டிருந்த போது வழி மறித்து  கிருஷ்ணமூர்த்தியை சிலர் அரிவாளால் வெட்டியதில் பல்வேறு இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அங்கு கிருஷ்ண மூர்த்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதைத் தொடர்ந்து உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்டது திருவில்லிபுத்தூர் அருகே உள்ள கரைவளைந்தான் பட்டி பகுதியில்  பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.  

இந்த கொலை தொடர்பாக கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கிருஷ்ண மூர்த்தியை  கொலை செய்த மர்ம நபர்களை வலைவீசித் தேடி வருகின்றனர். மேலும் முன்விரோதம் காரணமாக யாரும் கொலை செய்துவிட்டார்களா என்பது குறித்தும், கொலை நடந்த இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com