சின்ன ஏர்வாடி பகுதியில் காணாமல் போன மீனவர் சங்க பிரதிநிதி குமார் வழுதூர் அருகேயுள்ள ஏந்தல் கிராம சுடுகாட்டில் சிலரால் துண்டு துண்டாக வெட்டி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்டது குமாரா என போலீசார் விசாரித்து வரும் நிலையில், மீனவ கிராமத்தினர் சங்க பிரதிநிதிகள் குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கக் கோரியும் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளனர்.
டிஎஸ்பி வெள்ளத்துரை தலைமையில் போலீசார் மீனவ சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.