வேதாரண்யம்: நாகை மாவட்டம்,வேதாரண்யம் அருகே தந்தையை கம்பியால் அடித்து கொலை செய்த மகனை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
வேதாரண்யத்தை அடுத்த தகட்டூர்,சுப்பிரமணியன்காடு,சமத்துவபுரம் பகுதியில் வசித்து வந்தவர் வீ.முருகையன்(70)விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது மகனான அன்பழகன்(48),திருமணமாகி மனைவி,மகள் உள்ளனர்.மனநிலையில் லேசான பாதிப்பு இருந்ததாக் கூறப்படும் இவருக்கு மது குடிக்கும் பழக்கமும் உண்டு.
இதனால்,குடும்பத்துக்குள் ஏற்பட்ட பிரச்னையால் பிரிந்த இவரது மனைவி சித்ரா தனது தந்தை வீட்டில் மகளுடன் வசித்து வருகிறார்.
இந்திலையில், பெற்றோருடன் வசித்து வந்த அன்பழகன்,செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தனது தாய் கமலாவிடம் சாப்பாடு கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து, தந்தை முருகையனிடம் தகராறில் ஈடுபட்டு,கம்பியால் தாக்கியுள்ளார். மூக்கு,தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த முருகையனை ஆட்டோவில் திருத்துரைப்பூண்டி மருத்தவமனைக்கு கொண்டுசெல்லும் வவியிலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து உயிரிழந்தவரின் மனைவி கமலா அளித்த புகாரின்பேரில் வாய்மேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த போலீஸார் அன்பழகனை கைதுசெய்தனர்.