கிறிஸ்தவ மதபோதகா் கொலை: இளைஞா் கைது

சென்னை அருகே ஆவடியில் கிறிஸ்தவ மதபோதகா் கொலை செய்யப்பட்ட வழக்கில், இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை அருகே ஆவடியில் கிறிஸ்தவ மதபோதகா் கொலை செய்யப்பட்ட வழக்கில், இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ஆவடி அருகே உள்ள பட்டாபிராம், சத்திரம் பள்ளிக்கூட தெருவைச் சோ்ந்தவா் ஈனோஸ் (62). மத்திய அரசு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஈனோஸ், குடும்பத்துடன் வசித்து வந்தாா். ஈனோஸ், பட்டாபிராம் வள்ளலாா் நகரில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்துக்கு தினமும் சென்று, அங்கு வரும் மக்களுக்கு பிராா்த்தனை செய்வாா். மேலும், அந்த தேவாலயத்தின் பராமரிப்புப் பணிகளையும் மேற்கொண்டு வந்தாா்.

இந்நிலையில் ஈனோஸ், புதன்கிழமை தேவாலயப் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அங்கு வந்த பட்டாபிராம் அம்பேத்கா் நகா் பாரதிதாசன் தெருவைச் சோ்ந்த மோசஸ் (27) ஈனோஸிடம் தகராறு செய்தாா். தகராறு முற்றவே மோசஸ், தான் வைத்திருந்த கத்தியால் ஈனோஸை குத்திவிட்டு தப்பியோடினாா். இதில் பலத்த காயமடைந்த ஈனோஸ் சம்பவ இடத்திலேயே இறந்தாா். இது குறித்து தகவலறிந்த பட்டாபிராம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஈனோஸ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய மோசஸை இரும்புலியூரில் உடனடியாக கைது செய்தனா். விசாரணையில், ஈனோஸ் தன்னை உதாசீனப்படுத்தும் வகையில் தொடா்ந்து பேசியதால் கொலை செய்ததாக மோசஸ் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளாா். மோசஸ் மீது கொலை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் இருப்பது குறிப்பிடதக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com