தூத்துக்குடி திரேஸ்புரம் பெர்க்மான்ஸ் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப் படகில் 5 மீனவர்கள் சனிக்கிழமை அதிகாலை மீன்பிடிக்கச் சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கீழவைப்பார் பகுதி நடுக்கடலில் சென்றபோது அதிக கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக படகில் ஓட்டை விழுந்து படகு கடலில் மூழ்கி உள்ளது.
இந்த நிலையில் கடலோர காவல்படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நடுக்கடலில் தத்தளித்த 5 மீனவர்களும் பத்திரமாக மீட்க்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.