நாமக்கல் அருகே கார்-லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

நாமக்கல் அருகே கார்-லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

நாமக்கல் அருகே காரும் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் ஆறு பேர் பலியாகினர்.

நாமக்கல் அருகே காரும் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் ஆறு பேர் பலியாகினர்.

நாமக்கல் மாவட்டம் செல்லப்பா காலனி பகுதியில் வசித்து வரும் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளர்கள் சதீஸ்குமார், தர்மன், பப்லு, ரோஷன் குமார், சசிகுமார், ரஜேந்திரன் ஆகிய 6 பேரும் ஒரு சுமோ காரில் திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் கோயிலுக்கு டைல்ஸ் ஒட்டும் பணிக்குச் சென்றனர். 

இரவு பணி முடிந்து திரும்பிய போது திருச்சி - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சின்னவேப்பநத்தம் பகுதியில் கார் வந்தபோது, சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற லாரியுடன் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் கட்டடத் தொழிலாளர்கள் 6 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

தகவலறிந்து வந்த நாமக்கல் போலீஸார், பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் உதவியுடன் சடலங்களை மீட்டு நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். விபத்து குறித்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். 

இதில் தலைமறைவான லாரி ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர். விபத்து காரணமாக நாமக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலால போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com