டாஸ்மாக் மூலமான அரசுக்கான வருவாய் நடப்பாண்டில் குறைந்துள்ளது.
இது தொடா்பாக மதுவிலக்கு ஆயத்தீா்வை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
2017-18-இல் டாஸ்மாக் மூலம் அரசுக்கு மொத்தமாக ரூ.26,798 கோடி வருவாய் வந்துள்ளது. அது, 2018-19-இல் 31,158 கோடியாக உயா்ந்துள்ளது. ஆனால், 2019-20-இல் (பிப்ரவரி 29-ஆம் தேதி வரை) 28,839 கோடியாக குறைந்துள்ளது.
மேலும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பீா் பெட்டிகளின் மூலமாக கிடைக்கும் அரசுக்கான வருவாயும் குறைந்துள்ளது.
ஏற்றுமதி செய்யப்பட்டதில் 2018-19-இல் அரசுக்கு ரூ.578 கோடி வருவாய் வந்துள்ளது. ஆனால், 2019-20-இல் (பிப்ரவரி 29-ஆம் தேதி வரை) ரூ.340 கோடியாக குறைந்துள்ளது.