கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை: பிச்சாவரத்தில் படகு சவாரி நிறுத்தம்

கடலூர் மாவட்டம் மாங்குரோவ் காடுகள் அடங்கிய சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படகு சவாரி மார்ச் 31-ம் தேதி வரை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
பிச்சாவரம் படகுக்குழாம்
பிச்சாவரம் படகுக்குழாம்

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் மாங்குரோவ் காடுகள் அடங்கிய சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படகு சவாரி மார்ச் 31-ம் தேதி வரை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் உத்தரவின் பேரில்,கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக மா்ர்ச் 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை கடலூர் மாவட்டம் சிதம்ரம் அருகே தமிழ்நாடு சுற்றுலாக்கழகம் சார்பில் நடத்தப்படும் பிச்சாவரம் படகுக்குழாமில், படகுசவாரி நிறுத்தி வைக்கப்படுகிறது என சிதம்பரம் சுற்றுலா அலுவலர் க.சின்னசாமி பத்திரிகை குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com