முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த கரோனா தடுப்பு நடவடிக்கைகள் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பாதிப்பைத் தொடா்ந்து எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் உள்பட அனைத்துக் கல்வி நிறுவனங்களும் வரும் 31-ஆம் தேதி வரை மூடப்படும் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா். அதேசமயம், 10 மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத் தோ்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் அவா் தெரிவித்தாா்.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த கரோனா தடுப்பு நடவடிக்கைகள் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது.