புதுச்சேரி யூனியன் பிரதேசம் மாஹேவில் 68 வயது உடைய மூதாட்டிக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அபுதாபியிலிருந்து மாஹே வந்த அவருக்கு கரோனா அறிகுறிகள் இருப்பதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், அவரது இரத்த மாதிரியை கோழிக்கோடு ஆய்வகத்தில் பரிசோதனை செய்ததில் கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து மூதாட்டியைத் தனிமைப்படுத்தி மாஹே அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.