சென்னை தி. நகரில் கடைகளை மூட வேண்டும்: மாநகராட்சி ஆணையர்

சென்னை தி.நகரில் அனைத்துக் கடைகளையும் மூட வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை தி. நகரில் கடைகளை மூட வேண்டும்: மாநகராட்சி ஆணையர்


சென்னை தி.நகரில் அனைத்துக் கடைகளையும் மூட வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் அனைத்துக் கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவற்றை மார்ச் 31-ஆம் தேதி வரை மூட வேண்டும் என தமிழக அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இந்நிலையில், சென்னை தி. நகரில் மக்கள் அதிகளவில் கூடும் வணிக நிறுவனங்களை மூட வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார். ரங்கநாதன் தெருவில் மக்கள் அதிகளவில் வந்து செல்லும் வணிக நிறுவனங்களை மார்ச் 31-ஆம் தேதி வரை மூட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com