விருதுநகரில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம்

விருதுநகரில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகரில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம்

விருதுநகரில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்ட சிறை முன்பு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர் முகம்மது ஷபீக் தலைமையில் புதன்கிழமை சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது போலீசார் அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500 இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com