என்பிஆர்-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி திருவாரூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்துகொண்டு சி ஏ ஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.