தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி நாகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சி நிர்வாகிகள் ஆண்கள், பெண்கள் உள்பட 758-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.