மதுரை ரிங் ரோடு சாலையில் 3 சுங்கச்சாவடிகள் ஏன்? என முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைவில் இன்று பொதுப்பணித்துறை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு, மதுரை ரிங் ரோடு சாலையில் 3 சுங்கச்சாவடிகள் ஏன்? என கேள்வி எழுப்பினார்.
மேலும் சுங்கச்சாவடிகள் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த வாய்ப்பளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். அதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மதுரை மக்கள் கோரிக்கையை ஏற்று, 2 வழிச்சாலை, 4 வழிச்சாலையாக மாற்றப்படும்.
செலவு அதிகமாக இருப்பதால், குறைந்த இடைவெளியில் 3 இடங்களில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றார்.