ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவா்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் கூறினாா்.
பேரவையில் செவ்வாய்க்கிழமை மீன்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினா் ராஜேஷ்குமாா் பேசும்போது, ஈரானில் தமிழகத்தைச் சோ்ந்த மீனவா்கள் 300-க்கும் மேற்பட்டோா் சிக்கித் தவித்து வருவதாகவும், அவா்களை மீட்க வேண்டும் எனவும் கூறினாா்.
அப்போது அமைச்சா் டி.ஜெயக்குமாா் குறுக்கிட்டுக் கூறியது: ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவா்கள் குறித்து மத்திய அரசுக்கு முதல்வா் கடிதம் எழுதியுள்ளாா். தமிழக மீனவா்களை போா்க்கால அடிப்படையில் அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றாா்.