காஞ்சிபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

உத்தரமேரூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டான். 
காஞ்சிபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

உத்தரமேரூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டான். 

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே பெருநகர் பகுதியைச் சேர்ந்த சார்லஸ் என்பவரின் மகன் ஜாக்சன்(4). இவர் தனது வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். தொடர்ந்து சிறுவனை மீட்கும் பணியில் உத்தரமேரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டனர். பின்னர் சிறுவன் உயிரிழந்த நிலையில் சடலமாக தீயணைப்புத்துறையினரால் மீட்கப்பட்டார். கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com