திருப்பரங்குன்றம் அருகே கார் - இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல்: கணவன்-மனைவி பலி 

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே  நாகமலை புதுக்கோட்டை நான்கு வழி சாலையில் கார் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே
திருப்பரங்குன்றம் அருகே கார் - இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல்: கணவன்-மனைவி பலி 

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே  நாகமலை புதுக்கோட்டை நான்கு வழி சாலையில் கார் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மதுரை வில்லாபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 50). மதுரையில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். 

இவருடைய மனைவி வசந்தி (வயது 43) இருவரும் தனக்கங்குளம் நான்கு வழிச் சாலையை கடக்க முற்பட்டபோது சமய நல்லூரிலிருந்து திருமங்கலம் நோக்கி சென்ற கார் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் மனைவி இரு சக்கர வாகன விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com