உலகின் பல்வேறு பகுதிகளிலும் கரோனா வைரஸ் தொடர்ந்து பரவிவரும் நிலையில் இந்தியாவில் குரானா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதி மற்றும் பெரு நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட்டு இருந்தது. அதன்படி தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு திருப்பூர் பல்லடம் அவிநாசி சோமனூர் பகுதியில் இருக்கக்கூடிய ஜவுளி உற்பத்தியாளர் சங்கங்களின் கூட்டத்தில் நான்கு சங்கங்களின் ஜவுளி உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு கொரனா வைரஸ் தாக்கத்தின் பரவலை தடுக்கும் பொருட்டு இன்று முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை ஜவுளி உற்பத்தியை முழுமையாக நிறுத்துவது என்றும் ஏகமனதாக தீர்மானித்து இன்று முதல் உற்பத்தியை நிறுத்தியுள்ளனர்.