தஞ்சாவூர், கடலூர் மாவட்ட ஆட்சியர் வீட்டில் 55 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள நாடியம் கிராமத்தில் கடலூர் மாவட்ட ஆட்சியராக பணிபுரியும் வெ. அன்புச்செல்வன் வீட்டில் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 55 சவரன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.