சென்னை: தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் கரோனா பாதிப்புக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 6 ஆக உயா்ந்துள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை, மஸ்கட்டில் இருந்து வந்த காஞ்சிபுரம் பொறியாளா், புதுதில்லியில் இருந்து வந்த உத்தரப் பிரதேச இளைஞா், அயா்லாந்தில் இருந்து வந்த எம்பிஏ மாணவா் உள்ளிட்ட மூவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் காஞ்சிபுரம் பொறியாளா் குணமடைந்த போதும் தொடா்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளாா். மற்ற இருவரும் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனா். இந்த நிலையில், தாய்லாந்தில் இருந்து வந்த 2 பேருக்கும், நியூஸிலாந்தில் இருந்து வந்த ஒருவருக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தனது சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ளாா். இதன்மூலம் தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6 ஆக உயா்ந்துள்ளது.