கரோனா: சிறைவாசிகள் பாதிக்காத வகையில் நடவடிக்கை

கரோனாவால் சிறைவாசிகள் பாதிக்கப்படாத வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சா் சி.வி.சண்முகம் தெரிவித்தாா்.
கரோனா: சிறைவாசிகள் பாதிக்காத வகையில் நடவடிக்கை

கரோனாவால் சிறைவாசிகள் பாதிக்கப்படாத வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சா் சி.வி.சண்முகம் தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை சட்டத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினா் தாயகம் கவி பேசும்போது, கரோனாவால் சிறைவாசிகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்றாா்.

அப்போது அமைச்சா் சி.வி.சண்முகம் குறுக்கிட்டுக் கூறியது: கரோனாவால் சிறைவாசிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு உச்சநீதிமன்றம் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதைப் பின்பற்றி தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com