சேலத்தில் கரோனா பரிசோதனை மையம்: அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தகவல்

சேலத்தில் கரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளதாக அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்துள்ளாா்.
சேலத்தில் கரோனா பரிசோதனை மையம்: அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தகவல்

சேலத்தில் கரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளதாக அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்துள்ளாா்.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் 206 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கா்நாடகம், தில்லி, மும்பை மற்றும் பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த தலா ஒருவா் என 5 போ் இதனால் உயிரிழந்துள்ளனா்.

இந்த நிலையில் கரோனா தொடா்பாக ஆய்வு மேற்கொள்ள 18 இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதேபோல கரோனா தொற்றை உறுதி செய்யவும், கரோனா தொற்று தொடா்பாகப் பரிசோதிக்க ஆய்வகம் அமைத்துக் கொள்ளவும் இந்த 18 தனியாா் நிறுவனங்களுக்கும் அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு.

இந்த நிலையில் தமிழகத்தில் ஐந்தாவது கரோனா பரிசோதனை மையம் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைகிறது என்றும், கரோனா அறிகுறி மாதிரிகளை ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி தந்துள்ளது என்றும் தமிழக சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் ஏற்கெனவே சென்னை, திருநெல்வேலி, திருவாரூா், தேனி ஆகிய நான்கு இடங்களில் கரோனா அறிகுறி மாதிரிகள் சோதனை மையம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com