பிரதமரின் மக்கள் ஊரடங்கு அறிவிப்பைத் தொடர்ந்து புதுச்சேரியில் நாளை 22-ம் தேதி அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்காது என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசு எடுத்து வரும் கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளித்து, கரோனா வைரஸ் நோயை வெற்றிகரமாக ஒழிக்க வேண்டும் என்று அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்வதாகவும் முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.