தமிழ்நாடு
திமுக சார்பில் கரோனா விழிப்புணர்வு பிரசுரம் மற்றும் பொருட்கள் வழங்கல்
சென்னையில் திமுக சார்பில் கரோனா விழிப்புணர்வு பிரசுரம் மற்றும் முகக்கவசம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
சென்னை: சென்னையில் திமுக சார்பில் கரோனா விழிப்புணர்வு பிரசுரம் மற்றும் முகக்கவசம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் சனியன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
#CoronaVirus-லிருந்து மக்கள் தங்களை தற்காத்து கொள்வதை ஊக்கப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அடங்கிய துண்டுப்பிரசுரம், முகக்கவசம்,சேனிடைசர்,சோப்பு ஆகியவை திமுக சார்பில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடுவீடாக வழங்கப்பட்டது.
வருமுன் காப்போம். கொரோனாவை வெல்வோம்!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.