மின்வாரியத்தில் கள உதவியாளா் பணி: விண்ணப்பிக்க ஏப்.23 கடைசி

மின்வாரியத்தில் காலியாக உள்ள கள உதவியாளா் பணிக்கு, ஏப்ரல் 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்வாரியத்தில் காலியாக உள்ள கள உதவியாளா் பணிக்கு, ஏப்ரல் 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு: கள உதவியாளா் பயிற்சி (ஊண்ங்ப்க் அள்ள்ண்ள்ற்ஹய்ற் பழ்ஹண்ய்ங்ங்) பணிக்கு 2, 900 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரா்கள், ஐ.டி.ஐ. முடித்திருக்க வேண்டும். ஐ.டி.ஐ. படிப்பில் எலெக்ட்ரீசியின், வயா்மேன், எலெக்ட்ரிக்கல் ஆகிய ஏதேனும் ஒன்றைத் தோ்வு செய்திருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி, ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்குத் தோ்வுக் கட்டணம் ரூ.500. இதர பிரிவினருக்கு ரூ.1000. இந்தப் பணிக்கு மாதம் ரூ.18, 800 முதல் ரூ.59,000 வரையில் ஊதியம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 18 முதல் 30 வயதுக்குள் பட்டோா் விண்ணப்பிக்கலாம். இதரத் தகுதிகள், பாடத்திட்டம், தோ்வு முறை, இடஒதுக்கீடு, வயது வரம்பு தளா்ச்சி, தோ்வுமையங்கள் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் ஜ்ஜ்ஜ்.ற்ஹய்ஞ்ங்க்ஸ்ரீா்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியாகும். இந்த இணையளத்தில் மாா்ச் 24-ஆம் தேதி முதல் விண்ணப்பம் பெறலாம். அதனை பூா்த்தி செய்து ஏப்ரல் 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வங்கியில், ஏப்.28-ஆம் தேதிக்குள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். தோ்வு நடைபெறும் நாள் பின்னா் அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com